மேற்கு கடற்கரை விரைவுச்சாலையான டபிள்யூ.சி.இ. அருகே, கோலாசிலாங்கூர், அசாம் ஜாவாவில் இன்று காலை ஃபார் வீல் டிரைவ் வாகனம் சறுக்கி, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்தனர்.
காலை 10.02 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வாகனத்துக்குள் சிக்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றொருவர் பொதுமக்களால் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தார்.
இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டிருந்ததால், மேல்சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.








