Aug 29, 2026
Thisaigal NewsYouTube
எல்லை தாண்டும் புகைமூட்டம்: இந்தோனேசியாவுடன் இணைந்து செயல்படும் மலேசியா
தற்போதைய செய்திகள்

எல்லை தாண்டும் புகைமூட்டம்: இந்தோனேசியாவுடன் இணைந்து செயல்படும் மலேசியா

Share:

இந்தோனேசியாவில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ காரணமாக ஏற்பட்ட புகைமூட்டம் சரவாக் உள்ளிட்ட மலேசியப் பகுதிகளையும் பாதித்துள்ளது.

செரியான் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 195 வரை பதிவாகியுள்ள நிலையில், கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, கெடா மற்றும் பேராக் பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

புகைமூட்டத்தை சமாளிக்க இரு நாடுகளும் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன.

மேலும், எல்லைப் பகுதிகளில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசியாவுக்கு இந்தோனேசியா வான்வெளி அனுமதி வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவ மலேசியா தயாராக உள்ளது.

மேற்கு கலிமந்தான் பகுதியில் நிலைமை 2024-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் மோசமாக உள்ளதாக பொந்தியானாக் மலேசிய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள 577 மலேசியர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதில் தூதரகம் கவனம் செலுத்தி வருகின்றது.

Related News

"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" – எம்.பி ஆவது குறித்து சாஹிட் ஹமீடி மகள் நூருல்ஹிடாயா திட்டவட்டம்

"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" – எம்.பி ஆவது குறித்து சாஹிட் ஹமீடி மகள் நூருல்ஹிடாயா திட்டவட்டம்

ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் துரத்தியதாக குற்றச்சாட்டு: வியாபாரிக்கு ரிம 2.48 லட்சம் அபராதம்

ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் துரத்தியதாக குற்றச்சாட்டு: வியாபாரிக்கு ரிம 2.48 லட்சம் அபராதம்

சுதந்திரப் போராட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதோரின் பங்களிப்பை மறந்துவிடக் கூடாது -  முன்னாள் துணை ஐஜிபி வலியுறுத்து

சுதந்திரப் போராட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதோரின் பங்களிப்பை மறந்துவிடக் கூடாது - முன்னாள் துணை ஐஜிபி வலியுறுத்து

ஜாலான் சுங்கை பெசியில் ஆபத்தான சாகசம்: ஏமன் நாட்டவர்கள் 7 பேர் கைது

ஜாலான் சுங்கை பெசியில் ஆபத்தான சாகசம்: ஏமன் நாட்டவர்கள் 7 பேர் கைது

ஜோகூர் மாநில எதிர்க்கட்சித் தலைவராக சென் க எங் நியமனம் – பக்காத்தான் ஹராப்பான் அறிவிப்பு

ஜோகூர் மாநில எதிர்க்கட்சித் தலைவராக சென் க எங் நியமனம் – பக்காத்தான் ஹராப்பான் அறிவிப்பு

ஷா ஆலாமில் தொடங்கிய சிறார் இலக்கிய விழா – இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் புத்தக உலகப் பிரபலங்கள் பங்கேற்பு

ஷா ஆலாமில் தொடங்கிய சிறார் இலக்கிய விழா – இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் புத்தக உலகப் பிரபலங்கள் பங்கேற்பு