Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஓர் இந்திய குடும்பத்திற்கு நிவாரண வீடு
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஓர் இந்திய குடும்பத்திற்கு நிவாரண வீடு

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.10-

பினாங்கு பாயான் லெப்பாசில் நிகழ்ந்த தீ விபத்தில் தங்கள் வாடகை வீடு, முற்றாகச் சேதமுற்ற நிலையில், வீட்டையும், உடமைகளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய ஓர் இந்திய குடும்பத்தினர், தற்காலிகமாக தங்குவதற்கு பினாங்கு மாநில அரசின் ஆபத்து, அவசர நிவாரணத்திற்குரிய ஒரு வீட்டை பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ முருகையாவிடமிருந்து பெற்றப்பட்ட ஓர் அவசர வேண்டுகோளுக்கு இணங்க அந்த இந்திய குடும்பம் தற்காலிகமாகத் தங்குவதற்கு அவ்வீட்டை வழங்கி, அதற்கான சாவியையும் டத்தோஸ்ரீ சுந்தராஜ் ஒப்படைத்தார்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், இந்த இழப்பிலிருந்து மீட்சி பெறும் வரையில் இரண்டு மாதத்திற்கு வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் இலவசம் என்றும், வீட்டைத் திருப்பி ஒப்படைக்கும் போது, எப்படி வழங்கப்பட்டதோ, அது போலவே சுத்தமாக ஒப்படைத்தால் போதுமானதாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தஞ்சம் புகுவதற்கு உடனடி நிவாரணத்தை வழங்கிய டத்தோஸ்ரீ சுந்தராஜுவிற்கு டத்தோ முருகையா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்