ஜித்ரா,ஜன.10
கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் காயு ஹீத்தாம், குடிநுழைவு, சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு சோதனை கட்டட வளாகத்தில் தாங்கள் பயணித்த வாகனத்தில் போதைப்பொருளை மறைத்து, நாட்டிற்குள் கடத்த முயற்சி செய்த கர்ப்பிணை மாதுவும், அவரின் கணவரும் கைது செய்யப்பட்டனர்.
பெர்லிஸை சேர்ந்த 34, 35 வயதுடைய அந்த தம்பதியர், இரவு 11.50 மணியளவில் அந்த பாதுகாப்பு சோதனை கட்டட வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டதாக குப்பாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் ரொட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த தம்பதியரின் Toyota Hilux வாகனத்தை போலீசார் சோதனையிட்ட போது 10 ஆயிரத்து 277 கிராம் எடை கொண்ட கஞ்சா, பின் இருக்கையில் மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக ரொட்சி அபு ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.








