முவார்,ஜன.9
மாணவனின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஆசிரியருக்கு இன்று மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் 5,800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
43 வயதுடைய முஹமாட் நோர் ஃபஸ்லி ரஷிட்டிற்கு மாஜிஸ்ட்ரெட் ஃபத்தின் டலிலா காலிட் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு 18 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில் பொந்தியான்னிலிருந்து பண்டாருக்கு செல்லும் வழியில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதால் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த மாணவன் மீது மோதப்பட்டதாக முஹமாட் நோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் 18 வயதுடைய மாணவன் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரியவந்துள்ளது.








