Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியப் பிரஜைக்கு பொது மன்னிப்புக்கு அரசாங்கம் விண்ணப்பிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், பிப்.6-

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கு காத்திருக்கும் ஒரு மலேசியப் பிரஜையைக் காப்பாற்ற, பொது மன்னிப்புக் கோரி அரசாங்கம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கார்ப்பால் சிங் கேட்டுக்கொண்டார்.

மலேசியப் பிரஜைக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி, முந்தைய அரசாங்கத்தில் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்து கொண்ட மேல் முறையீட்டை ஒரு முன்னுதாரணமாகப் பின்பற்றி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொது மன்னிப்பு கோரி சிங்கப்பூரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ராம் கர்ப்பால் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமன் தற்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கு காத்திருக்கிறார்.

பன்னீர் செல்வம் ஒரு போதைப்பொருள் கடத்தல் காரர் அல்ல. ஆனால், போதைப் பொருள் கடத்தல் கும்பல், அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பது வழக்கின் சாராம்சத்தில் தெரியவந்துள்ளது என்று ராம் கார்ப்பால் தெரிவித்தார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து