Jan 23, 2026
Thisaigal NewsYouTube
தந்தையை கொலை செய்த ஆடவர் நாளை குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

தந்தையை கொலை செய்த ஆடவர் நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

தந்தையை சுலோப்பினால் அடித்துக்கொன்று, சடலத்தை சாலையோரத்தில் வீசியதாக கூறப்படும் மகன்,நாளை திங்க​ட்கிழமை பெட்டாலிங் ஜெயா மாஜி​ஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி சுங்கைவேயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பில் ஒரு வேலையற்ற நபரான 40 வயது சந்தேகப்பேர்வழி, காலை 9 மணிக்கு ​நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2 ஆண்டு காலமாக வேலைக்கு செல்லாமல் இ​ருப்பதாக கூறப்படும் தனது மகனை, கண்டித்ததற்காக 70 வயதுடைய அந்த தந்தை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது ​பூர்வாங்க விசார​ணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட அந்த நபரின் சடலம் பின்னர் துணியால் சுற்றுப்பட்டு சாலையோரத்தில் எறியப்பட்டதாக முகமது ஃபக்ருதீன் மேலும் கூறினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு