Apr 29, 2026
Thisaigal NewsYouTube
அலிஃப் சுக்ரிக்கு எதிரான அவதூறு வழக்கில்  அப்துல் காதிர் -க்கு சாதகமாகத் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

அலிஃப் சுக்ரிக்கு எதிரான அவதூறு வழக்கில் அப்துல் காதிர் -க்கு சாதகமாகத் தீர்ப்பு

Share:

தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலருமான அலிஃப் சுக்ரி காமர்சமான்க்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல் காதிர் ஷேக் ஃபட்சீர் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தனது அவதூறான சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக, அலிஃப் சுக்ரி, முன்னாள் அமைச்சரான அப்துல் காதிர்க்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்குச் செலவாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கலாச்சாரம், கலை மற்றும் சுற்றுலாத்துறை முன்னாள் அமைச்சரான 86 வயதான அப்துல் காதிர் ஷேக் ஃபட்சீர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அலிஃப் சுக்ரியின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக, அவர் மீது வழக்குத் தொடுத்திருந்தார்.

மில்லியன் கணக்கில் காதிர் கடன் பட்டுள்ளார் என்று அலிஃப் சுக்ரி சமூக ஊடகத்தில் கூறியதாகவும், அந்த குற்றச்சாட்டு தனது நற்பெயருக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் காதிர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Related News

மலாக்கா மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் / 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொகுதிகள் இருமடங்காக அதிகரிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் / 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொகுதிகள் இருமடங்காக அதிகரிப்பு

எஸ்.பி.ஆர்.எம் இரண்டாம் கட்ட விசாரணையில் ஜேம்ஸ் சாய் இன்று ஆஜரானார்

எஸ்.பி.ஆர்.எம் இரண்டாம் கட்ட விசாரணையில் ஜேம்ஸ் சாய் இன்று ஆஜரானார்

தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய நாம்வீ மனுத் தாக்கல்

தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய நாம்வீ மனுத் தாக்கல்

நாடெங்கிலும் 17 இடங்களில் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை - மெட்மலேசியா அறிவிப்பு

நாடெங்கிலும் 17 இடங்களில் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை - மெட்மலேசியா அறிவிப்பு

பெர்லிஸில் தலையில் ஏற்பட்ட காயத்தால் 8 மாதக் குழந்தை மரணம்: பராமரிப்பாளர் கைது

பெர்லிஸில் தலையில் ஏற்பட்ட காயத்தால் 8 மாதக் குழந்தை மரணம்: பராமரிப்பாளர் கைது

ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவருக்கு அறுவை சிகிச்சை: தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்

ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவருக்கு அறுவை சிகிச்சை: தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்