Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது விண்ணப்பத்தை சனூசி சமர்ப்பித்துள்ளார்
தற்போதைய செய்திகள்

இரண்டாவது விண்ணப்பத்தை சனூசி சமர்ப்பித்துள்ளார்

Share:

ஷா அலாம், ஜூலை 22-

அரச நிந்தனை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்திரி பெசார் சனூசி நோர், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்வதற்கு சட்டத்துறை அலுவலகத்தில் இரண்டாவது பிரதிநிதித்துவ மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

சனூசிக்கு எதிராக வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு வந்த போது, சனூசி மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் ஆகக்கடைசியாக ஏற்பட்டுள்ள புதிய நிலவரம் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்படுவதற்கு முன்னதாக, சட்டத்துறை தலைவரின் பதிலுக்கு சற்று காத்திருக்குமாறு சனூசி, நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

தம்முடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கு சட்டத்துறை தலைவருக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக சனூசி தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்