சுபாங் ஜெயா, சன்வே லகூனில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கேளிக்கை சாதனம் ஒன்றில் ஏற்பட்ட சம்பவத்தால் 10 வருகையாளர்கள் பாதிக்கப்பட்டதற்கும், அதானல் அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் சான்வே தீம் பார்க்ஸ் நிறுவனம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, மருத்துவத் தேவைகள் மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான மருத்துவ உதவிகளும் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சான்வே தீம் பார்க்ஸ் நிறுவனம், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட வருகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நிர்வாகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விரிவான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் சன்வே தீம் பார்க்ஸ் உறுதியளித்துள்ளது.
வருகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே தங்களது முதன்மையான முன்னுரிமை என்றும், அனைத்து கேளிக்கை வசதிகளிலும் உயர்ந்த பாதுகாப்புத் தரநிலைகளைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.








