Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தேசிய கால்பந்து வீரரின் மாமியார் கைது – போலி கடப்பிதழ் கும்பல் சிக்கியது!
தற்போதைய செய்திகள்

தேசிய கால்பந்து வீரரின் மாமியார் கைது – போலி கடப்பிதழ் கும்பல் சிக்கியது!

Share:

கோம்பாக், அக்டோபர்.05-

தேசிய கால்பந்து வீரர் ஒருவரின் மாமியார் என நம்பப்படும் ஒரு பெண்ணும் மூன்று பாகிஸ்தான் நாட்டவர்களும், போலி கடப்பிதழ் முத்திரைத் தயாரிப்புக் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்டு கோம்பாக் பகுதியில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மாதங்களாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இந்தக் கும்பலைப் பிடிப்பதற்காகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், கோம்பாக் மாவட்டக் காவற்படையின் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தச் சோதனையை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் அதிகாரப்படியான முத்திரைகள் சிக்கியுள்ளன. இந்தக் கைது நடவடிக்கையை கோம்பாக் மாவட்டக் காவற்படையின் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நோர் அரிஃபின் முகமட் நசீர் உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட அனைவரும் அக்டோபர் 8ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டு, ஆவண மோசடி தொடர்பாகச் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து