ஜன.10
லஞ்ச ஊழல் வாக்கில் 12 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பொது மன்னிப்பு கேட்டு, சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் தொடர்பாக மன்னிப்பு வாரியம் அடுத்த வாரம் விவாதித்து,முடிவு செய்யவிருக்கிறது.
நஜீப்பின் விண்ணப்பம் தொடர்பாக மன்னிப்பு வாரியத்தின் முதலாவது கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நஜீப்பின் விண்ணப்பத்தின் உள்ளடக்கம் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அந்த வாரியம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் கூடவிருக்கும் மன்னிப்பு வாரியம், தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூரை தளமாக கெண்ட CNA செய்தி நிறுவனம் கூறுகிறது.








