மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாலையில் விழுந்ததில் காரோட்டி ஒருவரும், மோட்டார் சைக்கிளோட்டியும் மரணமுற்றனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3.50 மணியளவில் கோலாலம்பூர், கம்போங் லெம்பா ஜெயா உத்தாரா, ஜாலான் உத்தாமாவில் நிகழ்ந்தது.
மரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய காரோட்டி சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் மோட்டார் சைக்கிளோட்டி, அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமுற்றதாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.








