Apr 1, 2026
Thisaigal NewsYouTube
485 பேர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலின் பலநோக்கு மண்டபத்தில் உள்ள துயர் துடைப்பு மையத்தில் உள்ளனர்
தற்போதைய செய்திகள்

485 பேர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலின் பலநோக்கு மண்டபத்தில் உள்ள துயர் துடைப்பு மையத்தில் உள்ளனர்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

புத்ரா ஹைட்ஸ், நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேர் இன்று காலை வரை புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலின் பலநோக்கு மண்டபத்தில் உள்ள தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணி முதல் பாதிக்கப்பட்டவர்களை சுபாங் ஜெயா சமூக நலத்துறை பெறத் தொடங்கினர். உணவு, உடை, படுக்கை வசதி உள்ளிட்ட தேவையான உதவிகளைப் பெற அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் இந்த மையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தற்போது, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்காலிகத் தங்குமிடம் தேவைப்படும் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய துயர் துடைப்பு மைத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெமிலியா மண்டபத்தில் உள்ள மற்றொரு தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இதற்கிடையில், கெமிலியா மண்டபத்தில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 44 பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அரசு சாரா நிறுவனங்களிடம் இருந்தும் பொது மக்களிடமிருந்தும் உணவு, உடை போன்ற உதவிகளைப் பெறப்பட்டுள்ளன. மேலும், பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்தைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் லேசான காயமடைந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்