Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரி உதவியாளர்கள் விவகாரம்: மேலும் எட்டு சாட்சிகள் அழைக்கப்படுவர்

Share:

ஷா ஆலாம், பிப்.27-

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளப்பணம் மாற்றம் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் 4 முன்னாள் மூத்த உதவியாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மேலும் எட்டு சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அனைத்து சாட்சிகளும் இந்த வாரத்திலும், அடுத்த வாரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படுவர். அதேவேளையில் நால்வரிடமிருந்து எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்த அனைத்து ஆவணங்களும் தற்போது சட்டவிரோத பணமாற்று சட்டமான AMLA- வின் கீழ் ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இந்த கைது நடவடிக்கையின் போது இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரின் வீட்டிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட்டை எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.

இந்த விசாரணையின் போது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, விசாரணைக்கு அழைக்கப்படுவாரா? என்று கேட்ட போது, அது குறித்து கருத்துரைக்க அஸாம் பாக்கி மறுத்து விட்டார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை