மலேசிய குடிநுழைவுத்துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கிளை அலுவலகங்களில் 'MyOnline' முறையின் வாயிலாக கடப்பிதழை பெறும் சேவையை வரும் ஜுன் முதல் தேதியிலிருந்து முழுமையாக அமல்படுத்தவிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
காஜாங், கிளானா ஜெயா மற்றும் வங்சா மாஜு ஆகிய மூன்று குடிநுழைவுத்துறை அலுவலகங்களில்
'MyOnline' கடப்பிதழ் முறை அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான கடப்பிதழை வெளியிடும் மையங்களாக இந்த மூன்று குடிநுழைவுத்துறை அலுவலகங்களும் விளங்குவதால் அவற்றில் 'MyOnline' முறை, நடைமுறைப்படுத்தப்படும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி


