May 27, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத குடியேற்றவாசிகள் லாங்காவியில் உள்ள Teluk Yu கடற்கரையில் படகில் வந்திறங்கினர்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத குடியேற்றவாசிகள் லாங்காவியில் உள்ள Teluk Yu கடற்கரையில் படகில் வந்திறங்கினர்

Share:

ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த 196 மியான்மர் சட்டவிரோத குடியேற்றவாசிகள் லாங்காவியில் உள்ள Teluk Yu கடற்கரையில் படகில் வந்திறங்கினர். அவர்களை ஏற்றி வந்த படகு தரை தட்டியதால் அவர்கள் பிடிபட்டனர் என Ketua Pengarah Maritim Malaysiaவின் அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் Laksamana Maritim Datuk Mohd Rosli Abdullah தெரிவித்தார்.

மேலும் இரண்டு படகுகள் மியான்மர் நாட்டவர்களை ஏற்றி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மலேசிய கடல்சார் Maritim Malaysia தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. காணாமல் போன படகுகளைக் கண்டறிய ரோந்து பணிகளும் வான்வழி கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, காணாமல் போன படகுகள் குறித்து தகவல் பெற முயற்சித்து வருகிறது Maritim Malaysia. லாங்காவியைச் சுற்றியுள்ள கடல்சார் சமூகத்தினரும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தெலுக் யூ கடற்கரையில் மக்கள் தரையிறங்கிய படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

சட்டவிரோத குடியேற்றவாசிகள் லாங்காவியில் உள்ள Teluk Yu கடற... | Thisaigal News