Mar 21, 2026
Thisaigal NewsYouTube
போலியான மதுபானங்களை தயாரிக்கும் இடங்கள் சோதனை
தற்போதைய செய்திகள்

போலியான மதுபானங்களை தயாரிக்கும் இடங்கள் சோதனை

Share:

ஜொகூர், மே 14-

ஜொகூர், பொண்டியன் அருகே கம்போங் பத்து 34 -விலுள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் போலியான மதுபானங்களை தயாரிக்கும் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு 1 மணியளவில் மேற்கொண்ட இச்சோதனையில் அடையாள ஆவணங்கள் இல்லாத அடிப்படையில் 27க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம் குமார் தெரிவித்தார்.

இச்சோதனையில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 265 வெள்ளி மதிப்பிலான 1,683 லீட்டர் மதுபானம், Toyota எஸ்த்திமா ரக கார், நான்கு போத்தல்கள் மூடும் இயந்திரங்கள், ஐந்து மின்சார பம்புகள், உட்பட மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக குமார் கூறினார்.

அதுமட்டுமின்றி, வரி விதிக்கப்படாத மதுபானங்கள் விற்பனை மற்றும் போலி மதுபானங்களை தயாரித்தல் ஆகியவற்றை போலீசார் தொடர்ந்து கண்காணித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குமார் தகவல் வெளியிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து