Mar 31, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டங்களை முறியடிக்க பெரிய திட்டம்
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டங்களை முறியடிக்க பெரிய திட்டம்

Share:

அலோர்ஸ்டார், நவ.25-


கெடா மாநிலத்தில் தனியார் முதலீட்டுத்திட்டங்களை தோல்வி அடைய செய்வதற்காக பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது தங்களுக்கு தெரியவந்துள்ளதாக மாநில மந்திரி பெசார் சனூசி நோர் கூறுகிறார்.

கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டடங்களில் ஈடுபட நோக்கங்களை கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள், அந்த முதலீட்டுத் திட்டங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு அவற்றுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று சனூசி நோர் குறிப்பிட்டார்.

உதாணத்திற்கு கெடா மாநிலத்தில் லங்காவியில் 40 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள லங்கா சுக்கா முதலீட்டுத்திட்டத்தில் ஈடுபட முனைந்த பின் ஸையாட் இண்டர்நேஷனல் குரூப் நிறுவனம், அந்த முதலீட்டுத்திட்டத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டுள்ளதாக சனூசி நோர் தெரிவித்தார்.

அந்த நிறுவனம், தன்னை மீட்டுக்கொண்டதற்கான காரணங்கள் கூறப்படவில்லை என்று சனூசி நோர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முதலீட்டுத்திட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு நேற்று தாம் அம்பலப்படுத்தியது போல அவற்றுக்கு பல்வேறு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருவதாக மந்திரி பெசார் விளக்கினார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை