Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவில் 11 இடங்களில் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவில் 11 இடங்களில் வெள்ளம்

Share:

ஜோகூர் பாருவில் நேற்று மாலையில் பெய்த கனத்த மழையில் 11 இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் வாகனமோட்டிகளும், பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். மாலை 4 மணிக்கு தொடங்கிய கனத்த மழை, 6.15 வரை நீடித்ததில் ஜோகூர் மாநகரில் 11 பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, நீர் கரைப்புரண்டோடியது.

ஜாலான் ரொஸ்மெரா உத்தாமா, ஜாலான் செத்தியா10, செத்தியா இன்டா, ஜாலான் முத்தியாரா எமாஸ் உத்தாமா,ஜாலான் முஹமாட் அமின் 7,ஜாலான் செத்தியா 11 மற்றும் செத்தியா இன்டா ஆகியவை திடீர் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும் என்று ஜோகூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

Related News