Dec 3, 2025
Thisaigal NewsYouTube
'பங்களா உணவு' என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்களை அனுப்பி வந்த மோசடிக் கும்பல் கைது!
தற்போதைய செய்திகள்

'பங்களா உணவு' என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்களை அனுப்பி வந்த மோசடிக் கும்பல் கைது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் மோசடிக் கும்பல் ஒன்றின் செயல்பாடுகளை மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, ஓப்ஸ் செர்காப் என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் கெப்போங், செராஸ் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்திய அதிகாரிகள், அக்கும்பலைச் சேர்ந்த 3 வங்க தேச ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பிஎல்கேஎஸ் என்ற தற்காலிக வேலை அனுமதியைப் புதுப்பிக்கத் தேவையான உடல் பரிசோதனைகளைத் தவிர்க்க, போலி பாஸ்போர்ட்களைத் தயாரித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த பாஸ்போர்ட்களை ‘பங்களா உணவு’ என்ற பெயரில் உணவு டெலிவரி செய்வது போல் மோசடிக் கும்பல் அனுப்பி வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்