Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை இழந்தனர்
தற்போதைய செய்திகள்

பூச்சோங் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை இழந்தனர்

Share:

பூச்சோங், ஜாலான் வாவாசான் - னில் டிசம்பர் 16 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் பழுதுபார்க்கும் வேளையில் எந்தவொரு தெளிவான காலக்கெடு இல்லாததால் கின்ராரா மாநில சட்டமன்ற உறுப்பினர் எங் சி ஹான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுத்துள்ளார்.

அரசு நிறுவனங்கள் நிதி வழங்கி உதவுவதுடன் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிதொடங்க இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள், சாலையை சரிசெய்வது, மீண்டும் குடியிருப்புவாசிகள் அன்றாட வாழ்க்கையை தொடங்கும் அனைத்து பணிகளும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இங் சி ஹான் கூறினார்.

பழுது பார்க்கும் பணிகள் முடிந்த பிறகு சுபாங் ஜெயா நகர சபையினர் (MBSJ) கட்டமைப்புகள் பாதுகாப்பாக உள்ளதா என்று மதிப்பீடும் செய்வர் என்று அவர் விவரித்தார்.

வீடுகளிலிருந்து கார்களை வெளியேற்றும் முயற்சிகள் அனைத்தும் மேற்கொண்டு வருவதால் குடியிருப்பாளர்கள் பொறுமையாக இருக்கும்படி இங் சி ஹான் கேட்டு கொண்டார்.

Related News