Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் குடும்பத்திற்கு 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் குடும்பத்திற்கு 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் குடும்பத்திற்கு 3 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி, அரசாங்கத்திற்கும், போலீஸ் துறைக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெர்லிஸைச் சேர்ந்த அந்த சமூக ஆர்வலர் காாணாமல் போனது தொடர்பில் உரிய விசாரணையை நடத்த போலீஸ் துறை தவறிவிட்டதாக நீதிபதி சூ தியாங் ஜூ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அரசாங்கமும் போலீஸ் துறையும் தங்களுக்கான சட்டப்பூர்வக் கடமைகளை மீறி விட்டதாகவும், அவர்களின் அதிகாரிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டதாகவும் நீதிபதி சூ தியாங் ஜூ குறிப்பிட்டார்.

பெர்லிஸ் மாநிலத்தில் பெர்லிஸ் ஹோப் என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவரான அம்ரி சே மாட், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வெளியே செல்வதாகக் கூறி, வீட்டை விட்டுப் புறப்பட்டவர் பின்னர் வீடு வந்து சேரவில்லை.

அம்ரி சே மாட்டின் கார், மறுநாள் காலையில் பெர்லிஸ், புக்கிட் சாபாங் பள்ளி அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமூக ஆர்வலர் காணாமல் போனது தொடர்பில் போலீசார் உரிய விசாரணையை நடத்தத் தவறி விட்டதாகக் கூறி, அவரின் மனைவி நோர்ஹாயாத்தி அரிஃபின் அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்