Mar 13, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீடுகள்: கூட்டரசு மற்றும் மாநில அரசின் முயற்சியைப் பாராட்டிய பகாங் சுல்தான்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீடுகள்: கூட்டரசு மற்றும் மாநில அரசின் முயற்சியைப் பாராட்டிய பகாங் சுல்தான்

Share:

குவாந்தான், ஜனவரி.09-

மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை முழுமையாக இழந்த மக்களுக்கு, அரசாங்கம் சார்பில் இலவசமாக வீடுகள் கட்டி வழங்கப்படுவதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிச் செய்ய, கூட்டரசு அரசாங்கமும் பகாங் மாநில அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தத் திட்டம் மிகவும் போற்றுதலுக்குரியது என்று சுல்தான் அப்துல்லா வர்ணித்தார்.

தங்களின் வாழ்நாள் சேமிப்பில் கட்டிய வீடுகளை வெள்ளத்தில் இழந்த மக்களுக்கு, மீண்டும் ஒரு புதிய வீட்டை இலவசமாகக் கட்டித் தருவது மிகப் பெரிய நிவாரணமாகும். இது மக்களின் துயரைத் துடைப்பதில் அரசாங்கத்திற்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது.

பகாங், பெந்தோங், கம்போங் சுங்கை பெர்டாக்கில் இன்று, ERC மற்றும் Ru”RASA வீடுகளுக்கான சாவிகளை மக்களிடையே ஒப்படைக்கும் நிகழ்வில் சுல்தான் இதனைத் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்