Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஆடவரை ரப்பர் குழாயினால் தாக்கியதாக மூவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆடவரை ரப்பர் குழாயினால் தாக்கியதாக மூவர் மீது குற்றச்சாட்டு

Share:

கூலாய், ஜூலை.15-

ஜோகூர், கூலாயில் கடந்த மாதம் ரப்பர் குழாயைப் பயன்படுத்தி ஆடவர் ஒருவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாக ஒரு கும்பலைச் சேர்ந்த மூவர், கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

33 வயது ஷாம் சீ ஃபெய், 27 வயது தோம்மி வூ மற்றும் 32 வயது எம். நாகேஸ்வரன் ஆகிய மூவரும், மாஜிஸ்திரேட் ஆர். சாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மே 23 ஆம் தேதி கூலாய், தாமான் லெஜெண்டா புத்ராவில் 27 வயதுடைய நபரை மரணம் விளைவிக்கும் தன்மையில் ரப்பர் குழாயினால் அடித்துக் காயம் விளைவித்தாக மூவரும் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்