இலகுரக விமானம் ஒன்று , ஓடு பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் பெண் பயிற்சி விமானி ஒருவர் காயத்திற்கு ஆளாகினார். இச்சம்பவம் இன்று மதியம் 12.16 மணியளவில் மலாக்கா பத்து பெரென்டாம் அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
23 வயதுடைய அந்த பெண் பயிற்சி விமானி , இலகுரக விமானத்தை தரையிறக்குவதற்கு முற்பட்ட போது விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி , விபத்துக்குள்ளானதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.
இந்தர்நேஷனல் எய்ரோ திரேனிங் அகாடமி எஸ். டி. என் பி.ஷ்.டி விமான பயிற்சி பள்ளிக்குச் சொந்தமான அந்த இலகுரக விமானத்தை செலுத்திய அந்த பயிற்சி விமானி , மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவருக்கு கடுங்காயங்கள் ஏற்படவில்லை என்று ஏசிபி கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


