Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பயிற்சி விமானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பயிற்சி விமானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

Share:

இலகுரக விமானம் ஒன்று , ஓடு பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் பெண் பயிற்சி விமானி ஒருவர் காயத்திற்கு ஆளாகினார். இச்சம்பவம் இன்று மதியம் 12.16 மணியளவில் மலாக்கா பத்து பெரென்டாம் அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்தது.

23 வயதுடைய அந்த பெண் பயிற்சி விமானி , இலகுரக விமானத்தை தரையிறக்குவதற்கு முற்பட்ட போது விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி , விபத்துக்குள்ளானதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

இந்தர்நேஷனல் எய்ரோ திரேனிங் அகாடமி எஸ். டி. என் பி.ஷ்.டி விமான பயிற்சி பள்ளிக்குச் சொந்தமான அந்த இலகுரக விமானத்தை செலுத்திய அந்த பயிற்சி விமானி , மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவருக்கு கடுங்காயங்கள் ஏற்படவில்லை என்று ஏசிபி கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

Related News