ஈப்போ, டிசம்பர்.20-
பேரா மாநிலத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கான முழுமையான தடை 2026 மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதனை பேரா மாநில அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினர் தே கோக் லிம் இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தத் தடை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், பொதுமக்கள் போதிய முன்னேற்பாடுகளைச் செய்ய கால அவகாசம் அளிக்கும் வகையில், இது மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகம் தே கோக் லிம் தெரிவித்துள்ளார்.
பல்பொருள் அங்காடிகளான Supermarket- டுகள், Convenience stores கடைகள், துரித உணவு விடுதிகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட நிரந்தர வணிக வளாகங்களில் இந்த தடை அமல்படுத்தப்படும் என்று தே கோக் லிம் விளக்கினார்.








