Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ரெம்பாவ் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு: நவம்பர் 24-ல் அடுத்தக் கட்ட விசாரணை!
தற்போதைய செய்திகள்

ரெம்பாவ் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு: நவம்பர் 24-ல் அடுத்தக் கட்ட விசாரணை!

Share:

சிரம்பான், அக்டோபர்.31-

15 வயதுடைய இரண்டு பள்ளி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ரெம்பாவ் பள்ளி ஆசிரியர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில், அடுத்த விசாரணை நவம்பர் 24 ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்குகள் தொடர்பான சில மருத்துவ அறிக்கைகள் இன்னும் தயாராகவில்லை என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் நோராஸிஹா அஸ்முனி, இன்று அமர்வு நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, நீதிபதி சுரிதா புடின், விசாரணையை வரும் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ரெம்பாவ் பள்ளியின் ஆசிரியரான 36 வயதான முகமட் அஷ்ராஃப் அஹ்மாட், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், மதியம் 1.30 மணியளவிலும், கடந்த மே 16-ஆம் தேதி காலை 9.30 மணியளவிலும், பள்ளியின் வகுப்பறைகளில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே வேளையில், கடந்த மே 5 ஆம் தேதி, காலை 10.40 மணியளவில், மற்றொரு மாணவியிடமும், அவர் இக்குற்றத்தை புரிந்தார் என்றும் அவருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை