May 24, 2026
Thisaigal NewsYouTube
மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம்
தற்போதைய செய்திகள்

மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம்

Share:

பேராக்,ஜூலை 28-

பேராக், GERIK, KAMPUNG JAGOR, அருகே உள்ள SUNGAI PERAK ஆற்றில், நேற்று மாலை 5.40 மணிக்கு மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம், இரு நாள்களுக்கு முன், போலிஸ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தப்பியோடிய நபர் உடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 25-ஆம் தேதி, BERSIA, BATU 6 அருகில் உள்ள டுரியான் பழத்தோட்டத்தில் GERIK மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட Op Tapis சோதனையின் போது அந்த ஆடவர் தப்பி சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் உடலில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படாததால், அந்த நபரின் மரணம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட அந்த ஆடவரின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம் | Thisaigal News