MALAYSIA AIRPORT HOLDINGS BERHAD - MAHB நிறுவனம் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு விற்கப்படாது. அதன் உரிமையை மலேசியாவே கொண்டிருக்கும் என பிரதமர் டத்தூஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நடப்பில், MAHB நிறுவனத்தில், கசானா நேஷனல்-லும் ஊழியர் சேமநிதி வாரியம் -EPF-ப்பும் 70 விழுக்காட்டு பெரும்பான்மை பங்குகளைக் கொண்டுள்ளன.
இதற்கு முன்பு, அந்நிறுவனத்தில் இருந்த 40 விழுக்காட்டு பங்குகளைக் காட்டிலும் அது அதிகமாகும்.
MAHB நிறுவனத்தின் முக்கிய நிர்வாக பதவிகளான தலைவர் மற்றும் தலைமை செயல்முறை அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளை, மலேசியர்களே வகிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
இன்றைய மக்களவைக் கூட்டத்தில், அமைச்சர்களின் கேள்வி பதில் அங்கத்தின் போது, தேசிய முன்னணியைச் சேர்ந்த பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமது ஷஹர் அப்துல்லா
எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அந்த விளக்கத்தை வழங்கினார்.








