பொது இடத்தில் ஓர் ஆணுடன் அநாகரீகமான செயலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் வயது குறைந்த பெண்ணை கைவிலங்கிட்டு, நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த போலீசாரின் நடவடிக்கைக் குறித்து மூடா கட்சி இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதே வேளையில், 17 வயதுடைய அந்தப் பெண் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜொகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் கார் ஒன்றுக்குள் நிகழ்ந்ததாக கூறப்படும் அச்சம்பவத்தில், அவர்களின் குற்றவியல் தன்மைக் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றாலும், ஒரு மாணவி என்று நம்பப்படும் வயது குறைந்த பெண்ணைக் கைவிலங்கிட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவது ஏற்புடையதுதானா? என்று மூடா கட்சியின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் டோபீ சியூவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் தொடர்பில், உள்துறை அமைச்சரும், போலீஸ் படைத் தலைவரும் பதிலளிக்க வேண்டுமென்று டோபீ சியூவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


