பொது இடத்தில் ஓர் ஆணுடன் அநாகரீகமான செயலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் வயது குறைந்த பெண்ணை கைவிலங்கிட்டு, நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த போலீசாரின் நடவடிக்கைக் குறித்து மூடா கட்சி இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதே வேளையில், 17 வயதுடைய அந்தப் பெண் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜொகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் கார் ஒன்றுக்குள் நிகழ்ந்ததாக கூறப்படும் அச்சம்பவத்தில், அவர்களின் குற்றவியல் தன்மைக் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றாலும், ஒரு மாணவி என்று நம்பப்படும் வயது குறைந்த பெண்ணைக் கைவிலங்கிட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவது ஏற்புடையதுதானா? என்று மூடா கட்சியின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் டோபீ சியூவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் தொடர்பில், உள்துறை அமைச்சரும், போலீஸ் படைத் தலைவரும் பதிலளிக்க வேண்டுமென்று டோபீ சியூவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


