பொது இடத்தில் ஓர் ஆணுடன் அநாகரீகமான செயலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் வயது குறைந்த பெண்ணை கைவிலங்கிட்டு, நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த போலீசாரின் நடவடிக்கைக் குறித்து மூடா கட்சி இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதே வேளையில், 17 வயதுடைய அந்தப் பெண் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜொகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் கார் ஒன்றுக்குள் நிகழ்ந்ததாக கூறப்படும் அச்சம்பவத்தில், அவர்களின் குற்றவியல் தன்மைக் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றாலும், ஒரு மாணவி என்று நம்பப்படும் வயது குறைந்த பெண்ணைக் கைவிலங்கிட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவது ஏற்புடையதுதானா? என்று மூடா கட்சியின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் டோபீ சியூவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் தொடர்பில், உள்துறை அமைச்சரும், போலீஸ் படைத் தலைவரும் பதிலளிக்க வேண்டுமென்று டோபீ சியூவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


