Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கழிவறையின் கூரையின் மேல் இருந்த 60 கிலோ ராட்சஷ மலைப்பாம்பு
தற்போதைய செய்திகள்

கழிவறையின் கூரையின் மேல் இருந்த 60 கிலோ ராட்சஷ மலைப்பாம்பு

Share:

சுங்கை பட்டாணி, நவம்பர்.17-

சுமார் 60 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று, தங்கள் வீட்டுக் கழிவறையின் கூரையின் மேல் இருந்ததைக் கண்ட சுங்கை பட்டாணியைச் சேர்ந்த ஆசிரியரும், அவரது மகளும் பேரதிர்ச்சிக் குள்ளாயினர்.

தாமான் பண்டார் பாரு PKNK-இல் உள்ள அவர்களது வீட்டில், கடந்த வாரம் புதன்கிழமை கழிவறையின் மேற்கூரையின் ஒரு பகுதி, திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது.

அப்போது வீட்டிலிருந்த அந்த ஆசிரியையின் 15 வயது மகள், கூரையின் மேல் பாத்தேக் போன்ற ஒரு துணி இருப்பதாக புகைப்படம் எடுத்து தனது தாயாருக்கு அனுப்பியுள்ளார்.

முதலில் பாத்தேக் வகை துணி என்று நினைத்த அவர்கள், பின்னர் தான் அது ஒரு மலைப்பாம்பு என்பதை உணர்ந்து, பொது தற்காப்புப் படையான ஏபிஎம்முக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், சுமார் 60 கிலோ எடை கொண்ட ராட்சஷ மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்துள்ளனர்.

இத்தனைப் பெரிய மலைப்பாம்பை இதுவரை கண்டிராத ஆசிரியரும், அவரது மகளும் பீதியடைந்துள்ளனர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு