அரசாங்க ஊழியராக புதியதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக 1,800 வெள்ளி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பொதுச் சேவை ஊழியர்களின் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கியூபெக்ஸ் முன்மொழிந்த புதிய கூட்டு சம்பள பேச்சுவார்த்தை பரிந்துரையில் குறைந்த பட்ச சம்பள கோரிக்கைக்கையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார்.
நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை கியூபெக்ஸ், பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது இந்த கோரிக்கைக்கு அதீத அழுத்தம் கொடுக்கப்பட்டதையும் அட்னான் மாட் சுட்டிக்காட்டினார்.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வகை செய்த மலேசிய ஓய்வுதிய சம்பள முறையான எஸ்.எஸ்.எம், ஆகக்கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி அமல்படுத்தப்பட்டதையும் அட்னான் மாட் விளக்கினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


