பினாங்கு மாநிலம் கெடாவிற்கு சொந்தமானது என்பதை காட்டுவதற்கு கூட்டரசு அரசிலமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் விடுத்துள்ள கோரிக்கையானது, தாம் தவறு இழைத்து இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்துதான் பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்று காட்ட வேண்டுமானால், பினாங்கு மாநிலம், மலாயா கூட்டரசில் இணையாண்மைக் கொண்ட ஒரு மாநிலம் என்பதை சனூசி ஒப்புக்கொண்டுள்ளார் என்று ராயர் குறிப்பிட்டார்.
நாட்டில் பொது அமைதியை சீர்குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்ற அடிப்படை வாதத்தை சனூசி முன்வைத்து வருகிறார் என்று ராயர் தெரிவித்தார்.
முன்னதாக, கெடா மந்திரி புசாருக்கு எதிராக பினாங்கு, தீமூர் லாவுட் போலீஸ் நிலையத்தில் ராயர் புகார் ஒன்றை செய்துள்ளார். போலீஸ் நிலையத்தில் ராயருடன் பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவாங் எங்கும் காணப்பட்டார்.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


