பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை விரைவில் சீரமைக்கப்படவிருக்கிறது. அமைச்சரவையின் சீரமைப்புக்கான பணிகளை பிரதமர் துறை முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக நெருக்கமான வட்டாரங்கள் தெவித்துள்ளன.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் சில அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர்கள் மாற்றங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்த நிலையில் பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து சில எதிர்மறையான தாக்குதல்களை ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்டாலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அமைச்சரவை சீரமைப்பு குறித்து பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


