பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை விரைவில் சீரமைக்கப்படவிருக்கிறது. அமைச்சரவையின் சீரமைப்புக்கான பணிகளை பிரதமர் துறை முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக நெருக்கமான வட்டாரங்கள் தெவித்துள்ளன.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் சில அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர்கள் மாற்றங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்த நிலையில் பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து சில எதிர்மறையான தாக்குதல்களை ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்டாலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அமைச்சரவை சீரமைப்பு குறித்து பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


