தாம் கேட்ட 50 வெள்ளியை கொடுக்கவில்லை என்பதற்காக தமது தாயாரை கத்திரிகோலினால் குத்தி கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஓர் இந்திய ஆடவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாத சிறைத் தண்டனை விதித்தது. வி. குமரன் என்ற 48 வயதுடைய அந்த குத்தகைத் தொழிலாளி கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஈப்போ, பெசாரா க்லெபாங் ஜெயா என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்கான மளிகைச் சாமான்களை வாங்குவதற்கு மட்டுமே தம்மிடம் 50 வெள்ளி இருப்பதாக அந்த நபரின் தாயார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் பொருட்படுத்தாத அந்த குத்தகைத் தொழிலாளி , கத்திரிகோலினால் மிரட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


