தாம் கேட்ட 50 வெள்ளியை கொடுக்கவில்லை என்பதற்காக தமது தாயாரை கத்திரிகோலினால் குத்தி கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஓர் இந்திய ஆடவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாத சிறைத் தண்டனை விதித்தது. வி. குமரன் என்ற 48 வயதுடைய அந்த குத்தகைத் தொழிலாளி கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஈப்போ, பெசாரா க்லெபாங் ஜெயா என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்கான மளிகைச் சாமான்களை வாங்குவதற்கு மட்டுமே தம்மிடம் 50 வெள்ளி இருப்பதாக அந்த நபரின் தாயார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் பொருட்படுத்தாத அந்த குத்தகைத் தொழிலாளி , கத்திரிகோலினால் மிரட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


