தாம் கேட்ட 50 வெள்ளியை கொடுக்கவில்லை என்பதற்காக தமது தாயாரை கத்திரிகோலினால் குத்தி கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஓர் இந்திய ஆடவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாத சிறைத் தண்டனை விதித்தது. வி. குமரன் என்ற 48 வயதுடைய அந்த குத்தகைத் தொழிலாளி கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஈப்போ, பெசாரா க்லெபாங் ஜெயா என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்கான மளிகைச் சாமான்களை வாங்குவதற்கு மட்டுமே தம்மிடம் 50 வெள்ளி இருப்பதாக அந்த நபரின் தாயார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் பொருட்படுத்தாத அந்த குத்தகைத் தொழிலாளி , கத்திரிகோலினால் மிரட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


