தாம் கேட்ட 50 வெள்ளியை கொடுக்கவில்லை என்பதற்காக தமது தாயாரை கத்திரிகோலினால் குத்தி கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஓர் இந்திய ஆடவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாத சிறைத் தண்டனை விதித்தது. வி. குமரன் என்ற 48 வயதுடைய அந்த குத்தகைத் தொழிலாளி கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஈப்போ, பெசாரா க்லெபாங் ஜெயா என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்கான மளிகைச் சாமான்களை வாங்குவதற்கு மட்டுமே தம்மிடம் 50 வெள்ளி இருப்பதாக அந்த நபரின் தாயார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் பொருட்படுத்தாத அந்த குத்தகைத் தொழிலாளி , கத்திரிகோலினால் மிரட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது


