கோலாலம்பூர், பிப்ரவரி.28-
வரும் 2028-ஆம் ஆண்டிற்குள், கிளானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவையில், 26 புதிய ரயில்கள் இணைக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
பழைய Bombardier 818 தொடர் ரயில் பெட்டிகளை நிலைப்படுத்துவதற்கான Prasarana உத்தியின் ஒரு பகுதியாக இந்த புதிய ரயில்கள் கொண்டு வரப்படவுள்ளன.
இவற்றில், கூடுதல் உதிரி பாகங்களை முன்கூட்டியே கொள்முதல் செய்வதும் அடங்கும் என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோலாலம்பூர் கூடுதல் இரயில் 27 எனப்படும் KLAV27 திட்டத்தின் கீழ், 27 Bombardier Innovia Metro 300 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கையகப்படுத்தலானது மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் இந்த புதிய KLAV27 ரயில் இணைப்பானது இயங்கத் தொடங்கியதாகவும் அவர் தமது முகநூல் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.








