Mar 14, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

மலேசியாவிற்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து உள்ளூர் சுற்றுலா பயண நிறுவனங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார். .

கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பொய்யான தகவல்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் தவறாக வியக்கியாணம் கொள்வதற்கு வழி வகுக்கும்.

இதனை தடுக்க மலேசியாவின் எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து அந்நிய சுற்றுப்பயணிகளுக்கு விளக்குவதில் சுற்றுலாப் பயண நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் தியோங் கிங் சிங் கேட்டுக்கொண்டார்.

Related News