Mar 23, 2026
Thisaigal NewsYouTube
Geng K- Boy கும்பல் முறியடிப்பு, எழுவர் கைது
தற்போதைய செய்திகள்

Geng K- Boy கும்பல் முறியடிப்பு, எழுவர் கைது

Share:

சீரம்பன், ஜூலை 2-

வீடு புகுந்து திருடுதல், வாகனங்களை களவாடுதல் போன்ற குற்றங்களை புரிந்து வந்துள்ள Geng K- Boy என்ற கொள்ளைக் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

அந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று நம்பப்படும் ஆடவர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கோலாலம்பூர், ஜோகூர்பாரு மற்றும் பேராவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மூளையாக செயல்பட்டவருக்கு அப்பாற்பட்ட நிலையில் மூவர், வீடு புகுந்து திருடுதல் மற்றும் வாகனங்களை களவாடுதல் முதலிய குற்றங்களை புரிந்து வந்துள்ளனர். இதர மூவர் மேற்கண்ட குற்றங்கள் நடைபெறுவதை அறிந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ உசேன் உமர் தெரிவித்தார்.

உளவுப்பிரிவு மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோம்பாக் மாவட்ட போலீஸ் குழு மேற்கொண்ட நடவடிக்கையில் 31 க்கும் 54 க்கும் இடைப்ட்ட வயதுடைய இந்த எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள் ஆவர் என்று டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.

Related News

Geng K- Boy கும்பல் முறியடிப்பு, எழுவர் கைது | Thisaigal News