மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்எவின் புதிய தலைவராக டாக்டர் எல். சிவநேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் ஆர். திருநாவுக்கரசுவின் பதவிக்காலம் செப்டம்பர் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக எம்எம்எவின் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், எம்எம்எவின் கௌரவ துணைச் செயலாளராக இரண்டு தவணைகளும், 2023 முதல் 2024 -ஆம் ஆண்டு வரை எம்எம்எ தனியார் மருத்துவப் பயிற்சியாளர்கள் பிரிவுத் தலைவராகவும் டாக்டர் எல். சிவநேசன் பணியாற்றியுள்ளார்.
நேற்று இரவு ஈப்போவில் நடைபெற்ற எம்எம்எ 2026 இரவு விருந்தில் உரையாற்றிய அவர், மலேசியாவின் பொது சுகாதாரத் துறையில் மருத்துவர்களைத் தொடர்ந்து பணியாற்ற வைப்பதே தனது முக்கிய முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களைத் தக்கவைத்துக் கொள்ள புதிய மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பது தீர்வாகாது என்றும், மருத்துவர்களின் பதவி உயர்வு, பணிச்சூழல், தொழில்முறை வளர்ச்சி மற்றும் நீண்டகால பணி வாய்ப்புகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








