May 22, 2026
Thisaigal NewsYouTube
திருட்புபொருட்களை வாங்கும் இரும்புக்கடை
தற்போதைய செய்திகள்

திருட்புபொருட்களை வாங்கும் இரும்புக்கடை

Share:

கிள்ளான், ஜூலை 03-

நேற்று திங்கட்கிழமை கிள்ளான்,தேலோக் காங் என்ற இடத்தில் ஓர் அந்நிய ஆடவர் உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் களவாடப்பட்ட கேபள் கம்பிகளை விலைக்கு வாங்கி வந்ததாக நம்பப்படும் இரும்புக் கடை ஒன்றின் நடவடிக்கை அம்பலமாகியுள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களில் திருடப்பட்ட கேபள் கம்பிகளை விலைக்கு வாங்கிய நபரும் அடங்குவர். சம்பந்தப்பட்ட இரும்புக்கடை / களவாடப்பட்ட பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது முதலிய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

22 க்கும் 54 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரை நேற்று 3 மணியளவில் அம்பாங் மாவட்ட போலீஸ் தலைமையத்தின் குற்றப்புலாய்வுத்துறை பிரிவு கைது செய்துள்ளனர்.

இன்று ஷா ஆலாமில் சிலாங்கூர் போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ உசேன் உமர் இவ்விவரத்தை வெளியிட்டார். தெரிவித்தார்.

Related News