கோலாலம்பூர், ஜூலை 15-
ஜெலுடோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer- ரை இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று முத்திரைக் குத்தியதற்காக கெடா, பெண்டாங் எம்.பி. அவாங் சோலாஹுதீன் ஹாஷிம், மக்களவையிலிருந்து 3 நாட்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
RSN Rayer- க்கு எதிராக அவாங் சோலாஹுதீன் பிரயோகித்த எதிர்ப்பு உணர்வு மிக்க வார்த்தையை மீட்டுக்கொள்ள அவர் தவறியதைத் தொடர்ந்து மக்களவை துணை சபா நாயகர் ராம்லி முகமது நொர் இந்த முடிவை அறிவித்தார்.
RSN Rayer- க்கு எதிராக தாம் பயன்படுத்திய அந்த வார்த்தையை மீட்டுக் கொள்ள முடியாது என்று . அவாங் சோலாஹுதீன் பிடிவாதமாக இருந்ததைத் தொடர்ந்து அவரை தற்காலிகமாக இடை நீக்கம் செய்வதாக துணை சபா நாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
நாடாளுமன்ற விவாதத்தின் போது கெடா மாநிலத்தில் சூதாட்டத்தையும், நம்பர் கடைகளையும் தற்காக்க முயற்சிக்கும் DAP- யைச் சேர்ந்த RSN ராயர், இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று அவாங் சோலாஹுதீன் முத்திரைக் குத்தினார்.








