சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது வருகையின் ஒரு பகுதியாக ஹைனான் சென்றடைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் அன்வார், மலேசிய நேரப்படி மாலை 5.29 மணியளவில் அவரின் சிறப்பு விமானம் போவாவ் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கியது.
போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் பிரதமரின் இந்தச் சீனா பயணத்தில் இடம்பெற்றுள்ளர்.
விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதர், ஹைனான் உதவிக் கவர்னர் சென் ஹுவாய் மற்றும் சீனாவிற்கான மலேசிய தூதர் அம்ரன் முகமட் சின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


