Jul 4, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரை நோக்கி பாராங்கைக் காட்டியதாக நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலீசாரை நோக்கி பாராங்கைக் காட்டியதாக நபர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜூலை.18-

கடந்த செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது போலீசாரை நோக்கி, பாராங்கை ஏந்திய நிலையில் பலவந்தம் புரிந்ததாக வணிகர் ஒருவர் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

43 வயது இஸாட் சைனி என்ற அந்த நபர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கோலாலம்பூர், டேசா பண்டான், சிம்பாங் தீகாவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வணிகத் தளங்களை அகற்ற மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் முற்பட்ட போது சம்பந்தப்பட்ட வணிகர், பாராங்கை ஏந்திக் கொண்டு மிக மூர்க்கமாகச் செயல்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 353 பிரிவின் கீழ் அந்த வணிகர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது