தங்கள் பகுதிகளில் அல்லது தாங்கள் பயணம் செய்கின்ற நகரங்களில் சாலை பழுது குறித்து மக்கள் மிக எளிதாக தெரியப்படுத்துவதற்கும், புகார் அளிப்பதற்கும் பொதுப்பணித்துறை, மை ஜாலான் என்ற பிரத்தியேக செயலியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. சாலைகளில் ஏற்படும் பழுதுகள், குறிப்பிட்ட அமலாக்கத் தரப்பினரின் பொறுப்பு மட்டுமல்ல. அந்த சாலையை பயன்படுத்துகின்ற அனைவருடைய கூட்டுப்பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் பொது மக்கள் சாலை பழுது தொடர்பான விவரங்களை இந்த மை ஜாலான் செயலி வாயிலாக தெரிவிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ செரி அலெக்ஸ்சென்டர் நந்தா லிங்கி
தெரிவித்துள்ளார். சாலையில் பழுது ஏற்படும் போது, அதனை பொதுப்பணித்துறை கண்டு பிடிக்கும் வரையில் அந்த பழுது, இதர வாகனமோட்டிகளுக்கு ஓர் இடையூறாக இல்லாமல் அதனை உடனுக்கு உடன் செப்பனிடுவதற்கு பொது மக்கள் தாராளமாக சாலை தொடர்புடைய தங்கள் புகார்களை மை ஜாலான் செயலி வாயிலாக தெரிவிக்கலாம் என்று அமைச்சர் அலெக்ஸ்சென்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


