தங்கள் பகுதிகளில் அல்லது தாங்கள் பயணம் செய்கின்ற நகரங்களில் சாலை பழுது குறித்து மக்கள் மிக எளிதாக தெரியப்படுத்துவதற்கும், புகார் அளிப்பதற்கும் பொதுப்பணித்துறை, மை ஜாலான் என்ற பிரத்தியேக செயலியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. சாலைகளில் ஏற்படும் பழுதுகள், குறிப்பிட்ட அமலாக்கத் தரப்பினரின் பொறுப்பு மட்டுமல்ல. அந்த சாலையை பயன்படுத்துகின்ற அனைவருடைய கூட்டுப்பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் பொது மக்கள் சாலை பழுது தொடர்பான விவரங்களை இந்த மை ஜாலான் செயலி வாயிலாக தெரிவிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ செரி அலெக்ஸ்சென்டர் நந்தா லிங்கி
தெரிவித்துள்ளார். சாலையில் பழுது ஏற்படும் போது, அதனை பொதுப்பணித்துறை கண்டு பிடிக்கும் வரையில் அந்த பழுது, இதர வாகனமோட்டிகளுக்கு ஓர் இடையூறாக இல்லாமல் அதனை உடனுக்கு உடன் செப்பனிடுவதற்கு பொது மக்கள் தாராளமாக சாலை தொடர்புடைய தங்கள் புகார்களை மை ஜாலான் செயலி வாயிலாக தெரிவிக்கலாம் என்று அமைச்சர் அலெக்ஸ்சென்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.


