பெர்லீஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய 3 மாநிலங்களில் 6 அணைக்கட்டுகளின் நீரின் மட்டம் வெகுவாக குறைந்து, அபாயக் கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிலிஸ்சில் உள்ள தீமா தாசோஹ், கெடாவில் உள்ள சுங்கை மூடா, பேடு, பேரீஸ், பினாங்கில் உள்ள ஆயர் ஹீதாம், மற்றும் தெலோக் பஹாங் ஆகிய நீர் நிலைகளில், நீரின் மட்டம் வறட்சி நிலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருப்பதாக span எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் தொடர்பில், நடப்பு நிலை மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. தற்போது நிலவிவரும் கடும் வெப்பம் காரணமாக நீர் நிலைகளில் வறட்சி சூழல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


