Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மூன்று மாநிலங்களில் நீர் விநியோகம் குறைகிறது
தற்போதைய செய்திகள்

மூன்று மாநிலங்களில் நீர் விநியோகம் குறைகிறது

Share:

பெர்லீஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய 3 மாநிலங்களில் 6 அணைக்கட்டுகளின் நீரின் மட்டம் வெகுவாக குறைந்து, அபாயக் கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிலிஸ்சில் உள்ள தீமா தாசோஹ், கெடாவில் உள்ள சுங்கை மூடா, பேடு, பேரீஸ், பினாங்கில் உள்ள ஆயர் ஹீதாம், மற்றும் தெலோக் பஹாங் ஆகிய நீர் நிலைகளில், நீரின் மட்டம் வறட்சி நிலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருப்பதாக span எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் தொடர்பில், நடப்பு நிலை மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. தற்போது நிலவிவரும் கடும் வெப்பம் காரணமாக நீர் நிலைகளில் வறட்சி சூழல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News