Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அதிகாரி மீது மேலும் இரண்டு லஞ்ச குற்றச்சாட்டுகள்

Share:

ஷா ஆலாம், ஜன.28-

கோலாலம்பூர், சுங்கை பெசி-உலு கிள்ளான் அடுக்கு விரைவு நெடுஞ்சாலைத்திட்டத்தில் தொடர்புடைய குத்தகையை பெற்றுத் தருவதாக கூறி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனமான Prolintas Group நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி ரோஸ்தாம் ஷாரிப் தாமி மீது மேலும் இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

59 வயது ரோஸ்தாம், இன்று காலையில் ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நாசீர் நோர்டின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அந்த குத்தகைத் திட்டத்தை Satunas Technogies Sdn. Bhd. நிறுவனத்திற்கு பெற்று கொடுப்பதாக கூறி, கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பூச்சோங்கில் உள்ள ஓர் உணவகத்தில் 90 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப்பணத்தை பெற்றதாக ரோஸ்தாமிற்கு எதிராக முதல் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

2023 மார்ச் 27 ஆம் தேதி காஜாங்கில் உள்ள மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தலைமையகத்தில் கார் நிறுத்தும் இடத்தில் மேலும் 20 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தை கையூட்டாக பெற்றதாக அந்த உயர் அதிகாரி மீது லஞ்ச குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்விரு குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை