Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பெந்தோங் விபத்து: காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு 19 வயது மாணவி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பெந்தோங் விபத்து: காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு 19 வயது மாணவி உயிரிழப்பு

Share:

பெந்தோங், ஜனவரி.19-

பகாங், பெந்தோங், Central Spine Road சாலையில் நேற்று இரவு நடந்த இரண்டு வாகன மோதலில், காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட 19 வயது மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று இரவு சுமார் 7.25 மணியளவில், ரவூப் நோக்கிச் செல்லும் சாலையின் 19.4-வது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த போது மழை பெய்து கொண்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் காஹார் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து ரவூப் நோக்கிச் சென்ற அந்தக் கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கால்வாயில் மோதிச் சரிந்தது. இதனால் காரில் பயணம் செய்த 19 வயது மாணவி வெளியே தூக்கி வீசப்பட்டார். அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரை ஓட்டிச் சென்ற 20 வயது வெளிநாட்டு இளைஞர் சிறு காயங்களுடன் தப்பினார். அவர் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இவர்கள் இருவரும் உயர்க்கல்வி நிறுவன மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று ஸைஹாம் காஹார் குறிப்பிட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு