MALAYSIA AIRPORT HOLDINGS BERHAD - MAHB நிறுவனத்தின் பங்குகள் விற்பனை குறித்து, அரசாங்கம் இன்னும் ஓரிரு நாள்களில் மக்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்கும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தூஸ்ரீ அஹ்மத் மஸ்லான் தெரிவித்தார்.
அவ்விவகாரம் குறித்து ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேற்று முந்தினம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
நடப்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சம்பந்தப்பட்ட கூட்டத்தில் வழங்கப்பட்ட விளக்கங்கள், கடைநிலை மக்களைச் சென்றடைவதைத் தாம் உறுதிபடுத்த போவதாகவும் பொதுப்பணி துணையமைச்சருமான மஸ்லான் கூறினார்.








