கோலாலம்பூர், நவ.15-
தாம் பணிபுரிந்து வந்த நகைக்கடையில் தங்க ஆபரணங்களை களவாடியதாக மாது ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டார்.
27 வயது அத்து சித்தி சோபியா கமருல்ஸமான் என்ற அந்த மாது கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி கோலாலம்பூர், வங்சா மாஜுவில் ஒரு நகைக்கடையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்தப் பெண்மணி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








